September 30, 2024
அரசியல்

மனிதனுக்கு கெட்ட நேரம் வந்தால் பிரச்சனைகள் தானாகவரும் கழுத்தைப் பிடித்து தள்ளிய ஓஐசி விளக்கம்!

இரண்டு பெண் பொலிஸாரின் கழுத்தைப் பிடித்து முன்னே தள்ளிய முரட்டுத் தனமான சம்பவம் தொடர்பில் சர்ச்சையில் சிக்கிய பாணந்துறை தெற்கு பொலிஸ் தலைமையக பொலிஸ் பரிசோதகர் சமீந்திர பிந்து, “மனிதனுக்கு கெட்ட நேரம் வந்தால் பிரச்சனைகள் வரும்“ என வியாக்கியானம் செய்துள்ளார்.

அவர் சிங்கள ஊடகமொன்றிற்கு கூறியதாவது:

பொலிஸ் தலைமையகத்தின் விசேட புலனாய்வுப் பிரிவினரும், மனித உரிமைகள் ஆணைக்குழு பிரதிநிதிகளும் இந்தச் சம்பவம் குறித்து என்னிடம் குறிப்புக்களை எடுத்துக் கொண்டனர்.

இந்த விடயம் தொடர்பில் தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணை நடவடிக்கைகள் காரணமாக மேலதிகமாக எதுவும் கூற வேண்டியதில்லை.

ஆனால் இச்சம்பவத்தில் ஈடுபட்ட இரு பெண் பொலிசாரும் விசாரணை தேவையில்லை என்று கூறியதாக ஊடகங்கள் மூலம் அறிய முடிந்தது.

இந்தச் சம்பவத்தைப் பற்றிச் சொல்ல வேண்டியது என்னவென்றால், கெட்ட நேரம் வந்தால் பிரச்சனைகள் வரும்“ என்றார்.

இலங்கை போலீஸ்

Tamilinzone.com

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service

PROS

+
Add Field

CONS

+
Add Field
Choose Image
Choose Video
X