சீன கப்பல் 10.6 மில்லியன் லீற்றர் டீசலுடன் நாளை வருகிறது
சீனாவினால் இலங்கைக்கு நன்கொடையாக வழங்கப்பட்ட 10.6 மில்லியன் லீற்றர் டீசலுடன் ‘சூப்பர் ஈஸ்டன்’ என்ற எண்ணெய் கப்பல் கொழும்பு துறைமுகத்தை நாளை (26) வந்தடையும். சீனாவில் இருந்து புறப்பட்ட ‘சூப்பர் ஈஸ்டன்’ கப்பல் தற்போது சிங்கப்பூர் துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டுள்ள நிலையில் நாளைய தினம் கொழும்பு துறைமுகத்தை வந்தடையும். விவசாயிகள் மற்றும் மீனவர்களுக்காக சீனாவினால் இந்த டீசல் நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது இந்த கப்பல் நாளை கொழும்பை வந்தடையவுள்ளதாகவும் சீனத் தூதரகம் தெரிவித்துள்ளது. tamilinzone.com